Monday, July 4, 2016

முயற்சி -கவிதை


பாதங்கள் நடக்கத்  தயாராக இருந்தால் 
பாதைகள்  மறுப்பு சொல்லப் போவதில்லை 
பாதை வகுத்து நாம்  முயன்றால் 
பாரில்  அனைத்தும்  வென்றிடலாம் 

எட்டி  வைத்து  நாம்  முயன்றால் 
எல்லாமே எட்டி விடும் தூரம்தான் 
எட்டடி அன்றி ஒரு சமயம் ஓரடியே வைத்தால் 
எட்டாக்கனியல்ல வெற்றிக்கனி 

இலக்கு உயர்வாக இருந்தால் வெற்றி இலகுவாகும் 
இலவு  காத்த  கிளியல்ல இலட்சியவாதி 
இலையுதிர் கால மரமல்ல 
இளைப்பாற உதவும் கரங்கள் 

திட்டமிட்டு செயல்பட்டால் 
நம்மை  உணர்ந்து முடிவெடுத்தால் 
மற்றவர் பாதையின் தடைக்கல் 
நம் பாதையின் படிக்கல் 
             
                     முயற்சி இல்லாமல் வெற்றி இல்லை 
                     முயற்சி இருந்தால் தோல்வி இல்லை 
                                                                                                  ம. மதுமிதா 
                                        முதலாம்  ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல்(I B.Sc.Bio Tech)

11 comments: