Friday, July 22, 2016

காகிதக் காதல் - ம.கோ. யோகேந்திர நிருருதிஸ்


அவள் என் கண்களை மட்டுமே பார்த்து பேசுவாள்!
நான் என் உதட்டின் மின்மினி மொழியால் இரசிப்பேன்
அவள் தனது பரம இரகசியங்களை
என்னிடம் மட்டுமே பகிர்வாள் என்ற
ஒரு நிச்சயம் எனக்கு இல்லை என்றாலும்
நான் அவளை இன்னும் காதலிக்கிறேன்..

அவளுக்கு ஆண்களோடு சேர்ந்து உட்காரும்
பழக்கமும் இல்லை அவசியமும் இல்லை.
அவளைச் சுற்றி தோழியர் கூட்டம் பிரிவதில்லை
அவளுக்கும் எனக்கும் தனிமை நிச்சயமில்லை
நான் அவள் தோழிகளோடு பேசினாலும்
அவளுக்கு என்மேல் கோபம் இருப்பதே இல்லை.

பெயருக்கு பெயர் போனவள் அவள்
யோசனைகளின் உயிரூற்றும் அவள்
அவள் பெற்றோர் நல்ல கல்வியாளர்கள்
இவளுக்கு பெயர் சூட்டுவதிலும் பெயர்போனவர்கள்
என்னென்ன பெயர்கள் இவளுக்கிருந்தாலும்
இவள் முன்னே இவள் பெயரைப் பிரயோகப்படுத்தினதில்லை!
ஆனால் எவர்க்கும் இல்லா சிறப்பம்சம்
இவளைப் பிறர்க்கு நான் அறிமுகம் செய்யும்போது
இவள் பெயரோடு இவள் பெற்றோர் பெயரையும்
சேர்த்து சொல்வேன் - கண்டுகொள்ளமாட்டாள்!

என்னைவிட இவளுக்கு பல மொழிகள் தெரியும் - ஆனால்
என்னோடு பேசும்போது ஒரே மொழிதான் மலரும்
அதுவும் கண்ணாலே பேசுவாள் கண்ணோடு பேசுவாள்.
அசையாமல் பேசுவாள் மௌனமாய்ப் பேசுவாள்.
எனக்கு பாஷைகள் பல கற்றுத் தருபவள் இவள்தான்
ஆனால் இத்தனைப் பெருமைகளை மறைக்கும்
இவளின் தன்னடக்கம் எனக்கிவளிடம் பிடித்த குணம்.

உன்னை நான் காதலிக்கிறேன், என் உயிரே!
நீயின்றி என் வாழ்வில் முழுமைக்கு இடமே இல்லை.
உனக்கன்றி என்வாழ்வில் இடமும் பிறர்க்கு இல்லை.
உனை எண்ணும் என் எண்ணத்தின் பயணங்கள் முடிவதில்லை..
புதுமைகளின் பதுமைகளாய் இதமாய் நீ நுதழ் விரித்தாய்..
மருள் போக்கி இருள் நீக்கி அருள்விளக்காய் ஒளிர்விட்டாய்..
என் இதயவாசலை உனக்காய்த் திறந்து வைக்கிறேன்..
நான் தினம் படிக்கும் புத்தகமே மீண்டும் அருள் பிரவேசி

                                                                   - ம.கோ. யோகேந்திர நிருருதிஸ்
                                                                        முதலாமாண்டு இளநிலை கணிதத்துறை
                                                                        எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோவை 


3 comments: